2.4.12

மூலிகைகளின் மகத்துவம் - பேரீச்சம்பழம்

dates_
தாவரவியற் பெயர்: Phoenix dactilifera
ஆங்கிலப்பெயர்: Date
இது எங்கும் பயிராகும் மரவகுப்பைச் சேர்ந்தது. இதுவட ஆபிரிக்கா, எகிப்து, அரேபியா முதலிய இடங்களில் சாதாரணமாக வளரும் மரம்.இதன் காய்க்குக் கர்ச்சூரங்க்காய் எனப் பெயர் வழங்கப்படுகின்றது. இதன் பழம் பிசின், கொட்டை கள், குருத்து,வெல்லம் என்பன மருத்துவப் பயன்பாட்டுடையன.இதனால் பித்தம், மதுமேகம். நீர்வேட்கை, மலபந்தம், நீர்க்கோவை,குடற்புண் தீரும். இதன் மருத்துவப் பயன்பாடுகளாவன; கர்ச்சூரம்
கர்ச்சூரம் என்னும் பேரீச்சங்காயின் பருப்பை நீக்கி அதை அப்படியே தேனில் ஊறப்போட்டு (40நாட்கள்) தினமும் 1 துண்டு உண்டுவரின் மாரடைப்பு வாய்வு நீங்குதல் மட்டுமல்லாமல்  மேற்குறித்த வியாதிகளும் போகும்.
குருதிக் கழிச்சல் போக
காய்களைப் பிளந்து விதையை நீக்கி அதற்குள் சுக்கு, மாம்பருப்பு, சிறுநாகப்பூ, கசகசா வகைக்கு 30 கி எடுத்து தூள் செய்து சுண்டை அளவு உருட்டி தினம் 23 உருண்டை வீதம் நாளொன்றுக்கு 34 வேளை கொடுக்க குருதிக்கழிச்சல் போகும்.
கழிச்சலை உண்டாக்க
பேரீச்சங்காய், கொட்டை, திராட்சை, சீரகம், ஓமம்,சீந்தில் தண்டு, வெட்டிவேர், நிலாவாரை, அதிமதுரம்  கடுகுரோகினி இவை சம எடை கொண்டு முறைப்படி குடிநீராக்கி 40 மி.லீ. வீதம் சிறிது பனங்கற்கண்டும் உப்பும் சேர்த்து ஒருவேளை காலையில் கொடுக்க கழிச்சல் உண்டாகும்.
இருமலுக்கு
சிற்றரத்தை, பேரீச்சங்காய், சுக்கு, அதிமதுரம், வகைக்கு 7.5 கி நறுக்கி ஒரு சீலையில் தளர்ச்சியாக முடிந்து அதனை 1/4 படி பசுவின் பாலில் போட்டு மீண்டும் 1/4 படி தண்ணீர் விட்டு சிறு தீயில் எரித்து விட்ட தண்ணீர் சுண்டக் கவனித்து வடித்து 15 கி கற்கண்டைப் போட்டுக் கலக்கி காலை, மாலை குடிக்க  7நாட்களில் நாட்பட்ட இருமலும் குணமாகும்.

தேமலுக்கு
பேரீச்சம்பழத்தை அனல்மீது காட்டிச் சுட்டு நீர்விட்டுப் பசைபோல அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் குணமாகும்.
குடற்புண்ணுக்கு இஞ்சி லேகியம்
இஞ்சி 1 1/2 கிலோ தோல் சீவி 6 படி நீர்விட்டு நீர்சுண்டக் காய்ச்சி நன்றாக வெந்தபின் கீழிறக்கி ஆறவிட்டு அதனை அம்மியிலிட்டு மைபோலரைத்து வைத்துக்கொள்ளவும். பேரீச்சம்பழம் விதை நீக்கி 3 கிலோ எடுத்து சிறிது நெய்விட்டு வதக்கி எடுத்துக் கல்லுரலில் இட்டு நன்றாய் இடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் சீனி 3 கிலோ, பசுநெய் 1/2 லீற், ஏலரிசிப் பொடி 20 கி,தேன் 1 1/2 இறா.
இஞ்சி, பேரீச்சம்பழம்,சீனி மூன்றையும் ஒரு சட்டியிலிட்டு நன்றாக கிளறி நன்றாய் உறவாகிய பின் ஏலரிசிப்பொடியை சேர்த்துக் கிளறி அப்பால் நெய்யையும் தேனையும் சேர்த்து நன்றாக கிண்டி ஒரு ஜாடியில் பத்திரப்படுத்தவும் இதில் 510 கி எடை காலை, மாலை தனியாகவேனும் சாப்பிட பசியின்மை, சுவையின்மை, மலச்சிக்கல், வயிற்றுப்பொருமல், வாந்தி, வாய்நீர் ஊறல், கிறுகிறுப்பு இவைகளும் தீரும்(அனுபவமுறை)
விக்கல் போக தாமரை வித்து லேகியம்
பேரீச்சம்பழம் 60 கிராம், திராட்சை 60 கிராம் கற்கண்டு 120 கி, தேன் 100 மி.லி. சாதிக்காய், சாதிப்பத்திரி, ஏலம், கராம்பு வால்மிளகு, கசகசா, திப்பிலி வகைக்கு 10 கிராம், தாமரை வித்துப் பருப்பு 120 கிராம், பசுநெய் 200 மி.லி. பாதாம்பருப்பு 60 கி, பசும்பால் 1 படி
பழங்கள், கசகசா, பருப்பு இவை யாவும் நெய் தெளித்து வறுத்து அரைத்து வைத்துக்கொண்டு மற்ற சரக்குகளை இளவறுப்பாகவறுத்து சூரணித்து  வைத்துக்கொண்டு பா லில்  கற்கண்டைப்போட்டு கரைத்துப் பாகுசெய்து சூரணங்களைத் தூவிக் கிளறி நெய் சேர்த்து வைக்கவும். ஆறிய பின்தேன் சேர்த்துக் கிளறி ஜாடியில் வைக்கவும் நெல்லிக்காயளவு தினம் 2 வேளை சாப்பிட்டு வர எப்படிப்பட்ட கொடிய விக்கலும் குணமாகும்.
நாவரட்சிக்கு
கொட்டை முந்திரிச்சாறு 1/4 படி கொண்டு அதில் உலர்ந்த பேரீந்தும் இலந்தைக் கொட்டைச் சதையும் கூட்டில் பிசைந்து வடித்த நீரை அடிக்கடி பருக உதடு நா வரண்டுபோதல் தணியும்.
ஆண்மைக் குறைவிற்கு
பேரீச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து இரவில் நாள்தோறும் 2 எடுத்துச் சாப்பிட்டு வரலாம்.
பேரீச்சம்பழம்,பாதாம்பருப்பு, பிஸ்தாப்பருப்பு சம எடை முறைப்படி குடிநீர் செய்து காலை மாலை பருகலாம்.
கொட்டைப்பாக்கையும் பேரீச்சம்பழத்தின் கொட்டையையும் சந்தனக் கல்லின்மீது நீர்விட்டுச் சந்தனம் போலரைத்து சம எடையாகக்கூட்டிக் களிபோல் கிளறி அடை தட்டி நெய்யில் வடைபோல சுட்டு எடுத்து தேனில் ஊறப்போட்டு வேளைக்கு 100 மி.கி.எடை காலை மாலை சாப்பிடலாம்.
காலை உணவுடன் 3பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வெந்நீர் அருந்த வேண்டும். இரவு உணவுக்குப்பின் 12 பழங்களை உட்கொண்டு பசும்பால் பருகவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 60நாட்கள் சாப்பிடவேண்டும். இந்நாட்களில் தயிர்,குளிர்பானம், கடலைவகை, எண்ணெய்ப்பண்டம். பழையசாதம் , உடலுறவு இவற்றைத் தவிர்க்கவேண்டும்.
கண் நோய்கள் போக
பழம் 2 ஐ தினமும் இரவு உணவுக்குப் பின் உண்டு 200 மி.லீ. பசும்பால் குடித்து வந்தால் உடல் உறுதி அடையும். கண்நோய்கட்டு மட்டுமன்றிதோலும்  மென்மை பெறும்.பல் நோய்களும் தீரும்.
இளமையில் நின்றுபோன மாதவிலக்கு ஏற்பட
பாதாம்பருப்பு 40 கி, உலர்ந்த திராட்சை 100 கி, தேங்காய்ப் பருப்பு 70 கி, பேரீச்சம்பழம் 8, இந் நான்கினையும் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு வெறும் வயிற்றிலே அவ்வப்போது அருந்திவந்தால் இளமையிலே நின்றுபோன மாதவிடாய் தோன்றும்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar